தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் நீரில் மிதந்து கிடந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரையில் குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.