Date:

மருந்து தட்டுப்பாடு பிரச்சினை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும்- கெஹெலிய ரம்புக்வெல்ல

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினை, இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் மருந்து இறக்குமதிக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மருந்துகளை கோரியதன் பின்னரே மருத்துவ நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி பணிகளை ஆரம்பிக்கும் என்பதால், மருந்துகளை இறக்குமதி செய்ய மூன்று மாதங்கள் ஆகும்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் முன்னணி மருந்து நிறுவனங்களிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் மருந்துகளை விநியோகிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

உயிர் காக்கும் மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களுக்காக தட்டுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா என்பன உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...