அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை பிரதமர் எடுத்ததாக வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம், சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும்.