இலங்கை போக்குரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றிரவு எரிபொருள் அதிகரிப்பைத் தொடர்ந்து இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறைந்தபட்சம் 19.5 சதவீதத்தினால் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 32 ரூபா அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.