Date:

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறும், நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்து பொலிஸ் மா அதிபரினால் விசேட சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எரிபொருளை பெறுவதற்கு வேறு வழிகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,  இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும், இடையூறு விளைவிக்கும் அவசியமற்ற நபர்களை வெளியேற்றுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் கொள்கலன்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரம்புட்டான், மங்குஸ்தான் உட்கொள்ளும் மக்களிடம் விசேட கோரிக்கை

ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்களை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு பெருகும்...

மஹர பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கண்காணிப்பு விஜயம் (clicks))

முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...

கொழும்பு மேயரின் நடனம்,சமூக ஊடகங்களில் வைரல்

ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே...

SJB இல் தற்போது தலையாட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர் -பொன்சேகா

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01...