Date:

எரிவாயுவுடன் மேலும் இரண்டு கப்பல்கள்

எதிர்வரும் 2 வாரங்களில் எரிவாயுவுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்தது.

ஓமனிலிருந்து இந்த கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளன.

3500 மெட்ரிக் தொன் எரிவாயு அவற்றில் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்றைய தினம் 50,000 சிலிண்டர்களை சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

35,000 சிலிண்டர்கள் நேற்று (19) விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து சிலிண்டர்களை இறக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது.

எரிவாயு சிலிண்டர்களை இன்று இறக்கும் பட்சத்தில், நாளை முதல் 80,000 சிலிண்டர்கள் வீதம் சந்தைகளுக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் சிலிண்டர்களுடன் அதிகாலை முதல் வரிசையில் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள...

நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன்! – நியூயோர்க் மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது...

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...