Date:

எரிவாயுவுடன் மேலும் இரண்டு கப்பல்கள்

எதிர்வரும் 2 வாரங்களில் எரிவாயுவுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்தது.

ஓமனிலிருந்து இந்த கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளன.

3500 மெட்ரிக் தொன் எரிவாயு அவற்றில் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்றைய தினம் 50,000 சிலிண்டர்களை சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

35,000 சிலிண்டர்கள் நேற்று (19) விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து சிலிண்டர்களை இறக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது.

எரிவாயு சிலிண்டர்களை இன்று இறக்கும் பட்சத்தில், நாளை முதல் 80,000 சிலிண்டர்கள் வீதம் சந்தைகளுக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் சிலிண்டர்களுடன் அதிகாலை முதல் வரிசையில் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373