Date:

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்து கொள்வனவு

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக  இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 1 தசம் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

UNICEF மூலம் குறித்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்படக்கூடிய மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி, ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருந்துகள் நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் 25 வகையான அத்தியாவசிய மருந்துகளை இலங்கை கொள்வனவு செய்ய முடியுமென ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri...