Date:

விரைவில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு – பிரதமர் எச்சரிக்கை

எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதோடு, நாளாந்தம் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், உலகத்தில் ஏற்படவுள்ள பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகி வருவதாக அமெரிக்காவின் நிதியமைச்சர் ஜனட் எலன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலகின் பல நாடுகளில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாகவும் அதில் இலங்கையும் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் உணவு கிடைக்காமல் போவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எனவே, உணவுத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, ஜூன் நடுப்பகுதி வரை எரிபொருள் இருப்பதாகவும், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த இதர அரச பணியாளர்கள் சேவைக்கு வருவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...

ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத்...

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...