Date:

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சமர்ப்பித்த கடிதத்திற்கு பிரதமர் பதில் கடிதம்

பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சமர்ப்பித்த 07 அம்ச கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.

 

பிரதமரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்தால் புதிய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவை வழங்குவோம் என எம்.பி.க்கள் பல விடயங்கள் தொடர்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அவர்களின் கடிதத்துக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா தொடர்பில், பெரும்பான்மை கருத்துடன் தான் உடன்படுவதாகவும், ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான பிரேரணையை ஆராய்ந்து சமர்பிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் அமைதியான முறையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸார் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது தொடர்பில் தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

 

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள், ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பிரதமர், தேவைப்பட்டால் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்தார்.

 

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான வழக்கு தொடர்பான உண்மைகளை உச்ச நீதிமன்றில் சமர்பிக்க விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் பிரதமர் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15)விசாரணைக்கு...

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புட்டின் ஒப்புக்...

நேற்றும் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய...

சவுதி வழங்கிய நிபந்தனையற்ற, ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று ...