Date:

பொது போக்குவரத்து சேவை வழமைக்கு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று(17) அதிகாலை 5 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடி காரணமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ள பஸ்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, அலுவலக மற்றும் ஏனைய ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் படி இயங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 12 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்துடன், ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக சில ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர்

இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர்...

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...

இன்று காற்றுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...