Date:

பிரதமர் நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான உண்மையான தகவல்களை மக்களுக்கு அறிவிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன், புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், சர்வதேச நாணயம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய உணவு, மருந்து, உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகிய செயற்பாடுகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் நெருக்கடி நிலைமையை வெற்றி கொள்வது தொடர்பில் சர்வதேச நாடுகளுடனான கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் தீர்மானமிக்க ச ரியான நடவடிக்கைகளை உரிய அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதன் மூலம் நாட்டை நிலையான தன்மைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...