Date:

அமெரிக்காவில் காட்டுத்தீ: 3,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவு தீக்கிரை

அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளது.

அதிகமான காடுகளை தீக்கிரையாக்கிய இந்த காட்டுத்தீ, அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீ சம்பவங்களில் ஒன்றாகும்.

‘பூட்லெக் தீ’ என்று அழைக்கப்படும் இக்காட்டுத் தீயினால் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து குறைந்தது 2,000 குடியிருப்பாளர்கள் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். குறைந்தது 160 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 6ஆம் திகதி தொடங்கி, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை விடப் பெரிய பகுதியை இந்த காட்டுத்தீ ஏற்கனவே எரித்துவிட்டது.

அத்துடன், போர்ட்லேண்டின் தென்கிழக்கில் 300 மைல் (480 கி.மீ) எரியும் இந்த தீ 160க்கும் மேற்பட்ட கட்டடங்களை அழித்துள்ளது.

கிளமத் போல்ஸ் மற்றும் ரெட்மண்ட் உட்பட பல நகரங்களில் வசிப்பவர்களுக்காக இரண்டு வெளியேற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

13 அமெரிக்க மாநிலங்களில் பரவும் 80க்கும் மேற்பட்ட பெரிய தீக்களில் இதுவும் ஒன்றாகும். இது வெப்ப அலைகள் மற்றும் அதிக காற்று ஆகியவற்றால் தூண்டப்படுகிறது.

ஓரிகனின் வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவமாக பார்க்கப்படும் இந்த தீயை அணைக்கப் 2,000க்கும் மேலான தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன்...

முஸ்லிம்களாகிய நாம் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும்

இளைஞர்களைப் பாதுகாக்க புர்கினா பாசோ துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது 🇧🇫     "புர்கினா பாசோ...

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...

சஃதியின் மரணம் தொடர்பில்… – எந்தவொரு மீள் விசாரணைக்கும் கல்லூரி பூரண ஒத்துழைப்பை வழங்கும்

மாணவர் மரணம் குறித்த கல்லூரி நிர்வாகத்தின் அறிக்கை ​கடந்த திங்கட்கிழமை (November 3,...