Date:

சஜித்தின் பதவிக்கு ஆபத்து

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் அபாயம் காணப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பராக இருந்தால் சஜித் அணியை சேர்ந்த ஹரீன் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவொன்று அரசாங்கத்தின் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த குழுவொன்று எதிர்க்கட்சி பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளன.

இவ்வாறு நடக்குமாக இருந்தால் பொதுஜன பெரமுனவினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கும் வாய்ப்புள்ளது.

இதன்போது சஜித் பிரேமதாச தரப்பினரால் பெரும்பான்மையை காட்டமுடியாது போகுமாக இருந்தால் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிடலாம்.

இந்நிலையில் தாமதிக்காது இடைக்கால அரசாங்கத்துடன் இணைந்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்க வேண்டும் அவரின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...