Date:

பிரதமராவாரா பொன்சேகா?

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பீல்ட் மார்ஷல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

இடைக்கால ஐக்கிய அரசாங்கத்திற்கான கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் புதிய முயற்சியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டு பிரதமர் பதவியை வழங்கவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. .

எவ்வாறாயினும், சரத் பொன்சேகா பிரதமராக நியமிக்கப்பட்டாலும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரையில் தான் அவரிடமிருந்து எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

போலியான செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள பொன்சேகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு காலிமுகத்திடலில் பொதுமக்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டத்திற்று நிபந்தனைகள் இன்றி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...