Date:

கடன்களை செலுத்த மக்களிடம் வரி அறவிடவேண்டுமே தவிர பிரதமர் வீட்டிலிருந்து எடுத்துவர இயலாது: பந்துல

சர்வதேச கடன்கள், தேசிய கடன்கள் அதற்கான வட்டிகளை செலுத்த பல பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மக்களின் பக்கம் தீர்மானம் எடுக்க முடியாது. இந்த கடன்களுக்கான பணத்தையும் மக்களிடம் இருந்தே அறவிட வேண்டியுள்ளது. மாறாக பிரதமர் வீட்டில் இருந்து கொண்டுவர முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி மற்றும் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். இதன்போது மக்களுக்கு சலுகைகள் வழங்குவதென்றாலும் அதனையும் மக்களின் வரிகளிலேயே பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் வரிகளின் மூலமாக 1,216 பில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே ஆண்டில் அரச துறை ஊழியர்களுக்கு கொடுப்பனவாக 1,015 பில்லியன் ரூபா கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான நெருக்கடி  நிலையிலேயே நாம் உள்ளோம். இதற்கு மேலாக அரச கடன்களை செலுத்த முடியாது. கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நெருக்கடி நிலையிலேயே 2020 ஆம் ஆண்டில் இருந்து எதிர்கொண்டு வருகின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் டிசம்பர் 29 முதல் வானிலையில் பாரிய மாற்றம்

டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் நாட்டின் ஊடாக கிழக்கு திசையிலான...

Breaking முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிக்கை

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலாளரின் அதிகாரப்பூர்வ...

Breaking கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை...