Date:

தம்மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த விரும்பினால், தாம் காலிமுகத்திடலுக்குச் செல்ல தயார்- இராஜ்

தம்மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த விரும்பினால், தாம் காலிமுகத்திடலுக்குச் செல்ல தயாராக இருப்பதாக இசையமைப்பாளர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

 

இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவின் பெற்றோரின் வீட்டிற்கு நேற்றிரவு சென்ற குழுவினர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்

 

இந்தநிலையில் குறித்த வீட்டில் தாம், தங்குவதில்லை என்றும், தனது பெற்றோர் மற்றும் சகோதரி மட்டுமே அங்கு தங்கியிருப்பதாகவும் இராஜ் தெரிவித்துள்ளார்.

 

தந்தை அறையொன்றில் இருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்ற போது அவரது தாயும் சகோதரியும் வெளியில் இருந்ததாக வீரரத்ன தெரிவித்துள்ளார்.

 

காலிமுகத்திடலுக்கு செல்ல தயார்! இசையமைப்பாளர் இராஜ்

 

தனது பெற்றோர் அரசியலில் ஈடுபடாதவர்கள் என்றும், அவர்கள், தமது சொந்தப் பணத்தில் கட்டிய வீடு இது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

பொதுமக்களுக்கு தம்முடன் பிரச்சினை இருந்தால் தம்மை தாக்கியிருக்கலாம்

 

இந்தநிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்மைத் தாக்க விரும்பினால், காலி முகத்திடலுக்குச் செல்லத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்

 

கொழும்பில் இருந்து தப்பிச்சென்றுள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளராக இராஜ் அனைவராலும் பார்க்கப்படுவதன் காரணமாகவே அவரது பெற்றோரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...