Date:

இங்கிலாந்தில் பெரும்பாலான கொவிட் கட்டுப்பாடுகள் இன்றுமுதல் தளர்வு

இங்கிலாந்தில் இன்று முதல் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தொற்று பரவல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் நீண்டகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பெரும்பாலான கொவிட் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, பொதுமக்கள் சந்திப்பதற்கும், ஒன்றுகூடலில் ஈடுபடுவதற்கான எண்ணிக்கை வரையறைகளும் நீக்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள், பணியிடங்களுக்கு திரும்புவதற்கும், இரவுநேர களியாட்ட விடுதிகளை திறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி கட்டாயமில்லை என்பதுடன், சில இடங்களுக்கு மாத்திரம் முகக்கவசம் அணிதல் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அது சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது நாளாந்தம் சுமார் 50,000 பேருக்கு தொற்று உறுதியாகின்ற நிலையில், கோடை காலத்தில் இந்த எண்ணிக்கை 200,000 வரையில் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்த புதிய நீல வட்டம் என்ன?

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற...

மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (உ/த) அதிக தரங்களுடன் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப்...

”என்னைக் கேலி செய்தவர்கள் இப்போது கேலிப் பொருளாகி விட்டனர்”

"ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி நான் பேசியபோது, ​​நான் கேலி செய்யப்பட்டேன்....

யோஷித-டெய்சி ஆச்சி மீது வழக்குப் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...