கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டபடி மே 23 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.