Date:

மீண்டும் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகப் போகிறாரா?!

நேற்றைய (5) தினம் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

 

முன்னதாக பிரதி சபாநாயகராக பதவி வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் ஜனாதிபதியிடம் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்

 

எனினும் ஜனாதிபதி அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தார்.

 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியுடன் தான் பதவியில் இருந்து விலகுவதாக சபையில் அறிவித்தார்.

 

அதற்கமைய, அவர் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.

 

இந்நிலையில் வெற்றிடம் ஏற்பட்டிருந்த பிரதி சபாநாயகர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்காக நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 

அதற்கமைய 148 வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவானார்.

 

இந்நிலையில் தான் மீண்டும் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில்...