Date:

பொல்துவ ஆர்ப்பாட்டத்தில் 14 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி

பத்தரமுல்லை பொல்துவ சந்தியில், பாராளுமன்ற நுழைவு வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

சந்தேகநபர்கள் மஹரகம போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் கட்டணம் அறவிடாமல் பெருமளவிலான சட்டத்தரணிகள் கடுவலை நீதிமன்ற வளாகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க சென்றவர்களை பொலிஸார் கைது செய்தமை அடிப்படை உரிமை மீறலாகும் என தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மாலை கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...