Date:

பிரதமர் பதவி விலக மாட்டாரா?! வெளியானது புது தகவல்

பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் நிறைவடைந்த ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பதவி விலகல் தொடர்பான தமது நோக்கத்தை நாடாளுமன்றத்தில் அறிவிப்பாரென முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

 

எவ்வாறாயினும், அந்த அறிவிப்பினூடாக, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் குழுவிற்கு இடமளிக்கும் வகையில், தான் பதவி விலகத் தயார் என பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவிருந்தார்.

 

அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகி, அரசியலமைப்பையும், பாராளுமன்றத்தில் நாட்டையும் அராஜகமாக்கத் தயாரில்லை என அறிவிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

 

எவ்வாறாயினும், பிரதமர், அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நேற்று மாலை சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையால் இந்த விசேட அறிக்கையின் திட்டம் மாறியுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

 

அதன்படி, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பதவி விலக தயாரில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373