Date:

பட்டினியுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில்சார் பாடசாலை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போஷாக்கு வேலைத்திட்டமும் தற்போது நின்று போயுள்ளதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுஜீவ விமலரத்ன கூறியுள்ளார்.

புத்தகங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் காலணிகளின் விலைகளும், பாடசாலை சீருடைகளின் விலைகளும் 200 வீதமாக அதிகரித்துள்ளன. அத்துடன் உணவுகளின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன.

சில மாணவர்கள் காலையில் பாடசாலையில் நடக்கும் கூட்டத்தின் போது மயங்கி விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மயங்கி விழும் மாணவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் காலையில் உணவு சாப்பிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் காலையில் உணவு சாப்பிடாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் ஒரு வகுப்பில் சுமார் நான்கு பேர் வரை இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோருக்கு பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவை கூட வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் விமலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொத்மலையில் மற்றும் ஒரு வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து!

கொத்மலை, கெரண்டி எல்ல பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வேன்...

நாட்டில் அதிகரிக்கும் சின்னம்மை தொற்று ; தடுப்பூசிக்கு பற்றாக்குறை

நாட்டில் தற்போது சின்னம்மை (Chicken Pox) நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகவும்,...

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழர்!

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக இலங்கை தமிழரான கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில்...

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373