Date:

நகர்ப்புற எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்- லிட்ரோ நிறுவனம்

அடுத்த சில வாரங்களில் எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு அதிகபட்ச எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகித்து தற்போதுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பெரும்பாலான எரிவாயு நுகர்வோர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், நகர்ப்புற விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

அத்துடன் 3,500 மெட்ரிக் டன் எரிவாயுடன் மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் மேலும் பல வழங்குநர்களை தெரிவு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவுதி சென்ற டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் முக்கிய...

மீண்டும் ஆரம்பிக்கும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக்...

6 வயது பிள்ளையின் உணவில் நஞ்சு கலந்த தந்தை!

தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள...

வீட்டில் தனியாக இருந்த 19 வயது இளம் யுவதிக்கு நடந்த கொடூரம்!

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373