மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் இன்று .உயிரிழந்துள்ளார்.
ஹட்டனில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக குறித்த நபர் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக வரிசையில் நின்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
நாடு முழுவதும் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.