Date:

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் தபால் திணைக்கள ஊழியர்கள்

அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் பணி புறக்கணிப்பு நடவடிக்கைக்கு தபால் திணைக்கள ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு வழங்கவுள்ளதாக தபால் சேவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தபால் சேவை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சம்பிக்க பெராரா ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, அரசாங்கத்திற்கு எதிராக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களினால் எதிர்வரும் 28 ஆம் திகதி ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...