Date:

எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சீனாவின் ஆதரவு தொடரும்- இலங்கைக்கான சீனாவின் தூதுவர்

கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலங்கையின் முடிவானது, இலங்கைக்கான 2.5 பில்லியன் டொலர் சீன உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தியுள்ளது.

சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 730,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது.

இதற்காக, மொத்தம் 12 கப்பல்களுக்கான கட்டணமாக, 390 மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், அதில் 7 கப்பல்களுக்கு மாத்திரம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சீனாவின் ஆதரவு தொடரும்.சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.

அந்த ஆதரவானது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை எனவும் இலங்கைக்கான சீனாவின் தூதுவர் கி சென்ஹொங் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...