வார இறுதியில் 3 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.
இதற்கமைய நாளைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், நாளை மறுதினம் 3 மணித்தியாலம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.