Date:

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக பேரவையில் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை மட்டகளப்பு மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட மூன்று பேர் இன்று காலை சென்றடைந்துள்ளனர்.

ஏற்கனவே, இலங்கையின் 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...