Date:

அனைத்து பதவிகளில் இருந்தும் சுரேன் ராகவன் நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த கடிதம் ஒன்றின் மூலம் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுரேன் ராகவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் பிரதிச் செயலாளர், வன்னி மாவட்ட உறுப்பினர் மற்றும் கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தயாசிறி ஜயசேகரவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...