Date:

மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

இன்றைய தினம் மின் துண்டிப்பை அமுல்படுத்தும் காலத்தை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மட்டுப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் 3 மணிநேரமும் 20 நிமிடம் மின் துண்டிக்கப்படவுள்ளது. முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

இந்தநிலையில், A முதல் L  வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் இரண்டு கட்டங்களாக மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு தேவையான உலை எண்ணெய்யினை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் வெளியிட்டதையடுத்து இன்றைய மின் துண்டிப்பு காலம் முன்னதாக திட்டமிட்ட நேரத்தை விட குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான...

ரஷ்யாவின் கரையோரப் பகுதியில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.4 ரிச்டர் அளவிலான...

விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை...

T-81 ரக துப்பாக்கியுடன் பெக்கோ சமனின் சகா கைது

எம்பிலிப்பிட்டிய கங்கேயாய பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் ஆதரவாளர் ஒருவர்...