Date:

பதவி விலகுவாரா மஹிந்த ? புதிய பிரதமர் யார்?

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதற்கு ஆலோசித்து வருவதாக இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றின் நிலையை கருத்திற்கொண்டும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமர் பதவிக்காக டலஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

ஏப்ரல் மாத முதல் வாரத்தில் பதவியிலிருந்து விலகுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருந்த போதும், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு அமைவாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், பிரதமர் பதவி விலகுவாரானால் ஆளுங்கட்சியில் உள்ள பெரும்பான்மையான எம்.பிக்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானம் மேற்கொள்வார்கள் எனவும், எனவே தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருக்க வேண்டுமென ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை வலியுறுத்தி வருவதாகவும் ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட...

2026 வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை.பெறுவது தொடர்பில் 2026 வரவு...

மீண்டும் இலங்கையில் எலிக்காய்ச்சல்

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 15 ஆம் திகதி ஹர்த்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி...