Date:

பதவி விலகுவாரா மஹிந்த ? புதிய பிரதமர் யார்?

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதற்கு ஆலோசித்து வருவதாக இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றின் நிலையை கருத்திற்கொண்டும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமர் பதவிக்காக டலஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

ஏப்ரல் மாத முதல் வாரத்தில் பதவியிலிருந்து விலகுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருந்த போதும், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு அமைவாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், பிரதமர் பதவி விலகுவாரானால் ஆளுங்கட்சியில் உள்ள பெரும்பான்மையான எம்.பிக்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானம் மேற்கொள்வார்கள் எனவும், எனவே தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருக்க வேண்டுமென ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை வலியுறுத்தி வருவதாகவும் ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

கம்பளையில் ரூ.22 கோடி கொள்ளை

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர்...

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

விராட் கோலி ஓய்வு

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373