ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் இரவு பகலாக 8வது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
நேற்று (15) இரவு போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்துள்ளமை பரவலாக பேசப்பட்டு வருகின்றது.நேற்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்