Date:

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க நடவடிக்கை – நிதி அமைச்சர்

இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போது, நிதி அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி இந்த கலந்துரையாடலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வொஷிங்டனில் இடம்பெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கான இலங்கையின் உயர்மட்டக் குழுவில், மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன், தொழில்நுட்ப நிபுணர் குழுவும் பங்கேற்க உள்ளதாக நிதி அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...