Date:

21 மில்லியன் மக்களின் எதிர்காலம் 226 பேரினால் நாசமாக்கப்பட்டுள்ளது – குமார் சங்கக்கார

நாட்டில் 226 பேரினால், 21 மில்லியன் மக்களின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது, மிகவும் விழிப்பான, உறுதியான மற்றும் தைரியமான தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குமார் சங்கக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 226 பேரினால் 21 மில்லியன் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியதாகப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இத்தனை காலமும் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் ஆட்சி கொள்கைகளினால் நாடு மிகவும் மோசமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமது நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்து அரசியல் தலைவர்கள் ஒருபோதும் வருத்தமடைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மற்றும் காபந்து அரசாங்கம் பற்றிய விவாதங்கள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு உடனடியாக குறுகிய கால அல்லது நீண்ட கால தீர்வு ஒன்று கட்டாயம் வேண்டும் என குமார் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.

எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை மக்கள் இனிமேலும் நம்பமாட்டார்கள் என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...