Date:

பிரதமரின் உரை பயனற்றது- விஜிதஹேரத்

பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.

வேறு பலவிடயங்களை தெரிவித்து நாட்டில் தற்போது காணப்படும் உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு பிரதமர் முயற்சி செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது உரையின் மூலம் நாட்டிற்கு தீர்வை முன்வைப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர் ஆனால் 60 வருடகால அரசியல் அனுபவமுள்ளதாக தம்பட்டம் அடிக்கும் பிரதமர் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்க தவறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மாகாணசபை உறுப்பினர் போன்று உரையாற்றியுள்ளமை துரதிஸ்டவசமானது  என விஜிதஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் உரையில் மூன்று விடயங்கள் மாத்திரம் இடம்பெற்றிருந்தன-30 வருட மோதல்-கொவிட் பெருந்தொற்று – 88-89 ம் ஆண்டு வன்முறையே அவை என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாகிவிட்டது – 88-89 இல் காணப்பட்ட விடயங்கள் தற்போதும் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு அத்தியாவசிய பற்றாக்குறைகள் 30 வருட யுத்தகாலத்தில் கூட காணப்படவில்லை.

அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற முடிவுகளால் மக்கள் இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...