Date:

மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்கவுள்ள அமைச்சர்கள்?

அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்றுக்கொண்டு நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்திருந்த குழுவிலிருந்து சிலர் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அமைச்சரவை நியமிப்பின் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ குறித்த தரப்பினர் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது.

தற்போது வரையில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றில் உள்ள 41 எம்.பிக்கள் சமீபத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்திருந்தனர்.

எவ்வாறாயினும், நேற்றைய தினம் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார புதிய இராஜாங்க அமைச்சுப் பொறுப்பொன்றை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...