Date:

மின்சார சபைக்கு அதிக விலையில் எரிபொருள் கொள்வனவு செய்ய தீர்மானம்

IOC நிறுவனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபைக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கொள்வனவு செய்தமை ஊடாக 57 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள போதும், மேலும் 12 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலினை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுகங்கள் நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

டீசல் ஒரு லீற்றருக்கு 290 ரூபா 98 சதத்தினை இலங்கை மின்சார சபைக்கு செலுத்தியதன் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இதன்படி, முன்னதாக 12 தடவைகள் IOC நிறுவனத்திடமிருந்து இலங்கை மின்சார சபை எரிபொருள் கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் கொள்வனவு செய்யப்படவுள்ள 12 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருள் தொகையானது அதிக விலையில் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஊடாக பெறப்படும் எரிபொருள் கையிருப்பை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாத நிலையில், மின்சார சபைக்கு பாரிய நட்டம் ஏற்படுமெனவும் எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுகங்கள் நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 30 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கொள்கலன் கப்பலொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...