நாட்டில் இன்றைய தினம் 4 மணித்தியால மின் விநியோகத் தடையை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய A தொடக்கம் L வரையான வலயங்களுக்கு காலை 08.30 தொடக்கம் மாலை 05.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 05.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் P முதல் W வரையான வலயங்களுக்கு காலை 10.45 தொடக்கம் மாலை 05.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 05.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், CC1 வலயத்தில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.