Date:

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு- இலங்கை மருத்துவ சங்கம்

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் 3 மாத காலம் மிகவும் சவாலான காலமாக இருக்கும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த சங்கத்தினர், பல வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் இஷான் டி சொய்சா, சத்திர சிகிச்சைகளுக்கு முன்னர் வழங்கப்படும் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் அவசர சத்திர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் இஷான் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373