Date:

மருந்து தட்டுப்பாட்டை தவிர்க்க சர்வதேச உதவியை நாடும் இலங்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக பல சர்வதேச நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக மருந்துப் பொருட்கள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் நேற்று தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...