நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு மக்கள் போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ரொஷான் மஹானாம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு செய்தியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இலங்கையின் தலைவர்களுக்கு எதிராக மிகவும் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்புகளை காட்டுமாறு பொதுமக்களை வலியுறுத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் போது தமக்கு தீங்கு விளைவிப்பதையோ அல்லது நாட்டின் எந்தவொரு சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பதையோ தவிர்க்குமாறு ரொஷான் மஹானாம மேலும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.