அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது
இதன்படி, சில வர்த்தக வங்கிகள் டொலரின் விற்பனை விலையை 320 ரூபாவாகக் குறிப்பிட்டுள்ளதாக நிதிச் சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக Financial Times of India செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.