Date:

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி ‘வீட்டுக்கு போ’ என கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளுடன் எம்.பி.க்கள்

எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்ற அறைக்குள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி ‘வீட்டுக்கு போ’ என கோஷங்களை எழுப்பியவாறு எம்.பி.க்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

 

அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கும் SJB பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிற்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து பாராளுமன்றம் இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவின் உரைக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறுக்கிட்டு பதிலளித்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என பாராளுமன்றத்தின் அரசாங்க பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் அறிவித்தார்.

 

அவரது பதில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வாக்குவாதத்தை விளைவித்தது, பல SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது ஜனாதிபதியை ராஜினாமா செய்யுமாறு பாராளுமன்ற அறைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

SJB பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றம் மீண்டும் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...