Date:

இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் எதற்காக வந்தார்கள்? சஜித் கேள்வி

நாட்டில் நிதி அமைச்சர் இல்லை. அதற்காக ஒருவர் வந்தார், ஆனாலும் அடுத்த நாளே போய்விட்டார் என இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் என்ன நடக்கிறது. திடீரென ஊரடங்கு, சமூக வலைத்தளங்கள் முடக்கம், அவசரகாலச் சட்டம் எல்லாம் எதற்கு, காரணங்களை கூறுங்கள்?அமைதியாக நடக்கும் போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து செல்கின்றனர். யார் இவர்கள் எதற்காக இப்படி வந்தார்கள், இதற்கு ஆளுங்கட்சியினர் பதில் கூற வேண்டும்.

நாட்டில் நிதியமைச்சர் இல்லை. அதற்கு பதிலாக நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சரும் ஒரே நாளில் பதவி விலகிவிட்டார். மேலும் நிதியமைச்சின் செயலாளரும் பதவியை இராஜினாமா செய்துவிட்டார். இப்படி சென்றால் நாடு பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாக தெரிகிறது-என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிமடையில் பஸ் விபத்து: ஒருவர் பலி

வெலிமடை, டயரபா பகுதியில் நேற்று இரவு தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு...

Breaking முடிவுக்கு வரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் – டிரம்ப் தெரிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் ‘முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ...

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை தகர்த்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் - இந்தியா மோதலால் இரு நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ள...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்..! ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை..!

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும்,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373