வெளிநாடுகள் சிலவற்றில் அமைந்துள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி நோர்வேயின் ஒஸ்லோ நகரிலுள்ள தூதரகம், ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள தூதரகம், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றை ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கு மத்தியில் வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது