Date:

மக்களின் விருப்பத்துக்கேற்பவே அரசு அமைக்கப்பட வேண்டும்- அநுரகுமார திஸாநாயக்க

தற்போதைய அரசில் நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,”நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற அதிகாரத்தை மக்கள் நிராகரிக்கின்றனர். இதனை நாம் ஏற்கவேண்டும். அதனால்தான் அமைச்சர்கள் பதவி துறக்கின்றனர். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எனவே, சர்வக்கட்சி அரசு என்ற பொறிமுறையை மக்கள் நம்பமாட்டார்கள். அதனை நிராகரித்துள்ளனர். தற்போது மக்களின் நம்பிக்கைதான் முக்கியம். இந்த ஆட்சி இல்லாவிட்டால், மற்றைய தரப்புக்கு ஆட்சி கையளிக்கப்பட வேண்டும்.” என்றார்.

“இந்த பிரச்சினைக்கு அரசமைப்பு ரீதியில் தற்போது தீர்வு இல்லை. எனவே, அரசமைப்புக்கு வெளியில் சென்று தீர்வை தேட வேண்டும் . அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அவ்வாறு கண்டறியும் தீர்வை அரசமைப்புக்குள் உள்வாங்கலாம். அதற்கான யோசனையை முன்வைக்கலாம். அதற்கு மக்கள் ஆணையே சிறந்த வழி. எனவே, மக்களின் விருப்பத்துக்கேற்பவே அரசு அமைக்கப்பட வேண்டும்.” என மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...