Date:

எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப் போவதில்லை- ரணில்

ரணில் விக்ரமசிங்க எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தெரிவித்துள்ளது.
தேசிய நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அனைத்துக் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ரணில் விக்ரமசிங்கவின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.
அதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கிணங்க அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து குழுவொன்று அமைத்து தேசிய நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளதாகவும் அந்த நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் கிடையாதென்றும் அந்தக் கட்சி அ தெரிவித்தது.
இதேவேளை, கட்சி பேதங்களின்றி தேசிய ஒருமைப்பாட்டுடன் செயற்பட வேண்டுமெனவும் பாராளுமன்றம் கூட்டப்பட்ட உடனேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15)விசாரணைக்கு...

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புட்டின் ஒப்புக்...

நேற்றும் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய...

சவுதி வழங்கிய நிபந்தனையற்ற, ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று ...