Date:

சமல் ராஜபக்ஷவின் வீட்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர்

திஸ்ஸமஹாராமவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டையும் இன்று (04) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

எங்களுடைய நடைபயணத்தை பொலிஸாரின் தடுப்பு வேலிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், ராஜபக்ஷக்கள் உட்பட இந்த நாட்டை சீரழிக்கும் எந்தவொரு அரசியல்வாதிகளையும் காவல்துறையினர் நீண்ட நாள் மறைத்து வைக்க முடியாது எனவும் பெருமளவான மக்கள் மழையில் நனைந்தபடியே சமல் ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடாத்தி வருகின்றனர்.

சமல் ராஜபக்ஷவின் வீட்டை சுற்றி ஏற்கனவே பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...