Date:

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா?

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று  உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளார்.

அமைச்சர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி இன்று ஏற்றுக்கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நேற்றிரவு அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

நாட்டில் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று அறிவித்திருந்தனர்.

இதன்மூலம் அமைச்சரவை கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் உருவாகும் நிலை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் சமகால பிரதமர் பதவி விலகாமல் அமைச்சரவை கலைக்க முடியாது என அரசியலமைப்பின் 49ஆவது சரத்து வெளிப்படுத்துவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...