Date:

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா?

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று  உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளார்.

அமைச்சர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி இன்று ஏற்றுக்கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நேற்றிரவு அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

நாட்டில் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று அறிவித்திருந்தனர்.

இதன்மூலம் அமைச்சரவை கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் உருவாகும் நிலை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் சமகால பிரதமர் பதவி விலகாமல் அமைச்சரவை கலைக்க முடியாது என அரசியலமைப்பின் 49ஆவது சரத்து வெளிப்படுத்துவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373