Date:

சீரற்ற வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு மின்சாரம் இல்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை மின் துண்டிப்பு குறித்து 12 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் நிலைமையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை, கிரிபத்கொடை, கண்டி, பெராதெனிய, குளியாப்பிட்டி, குருணாகல், களனி, இரத்மலாலை, சிலாபம் ஆகிய இடங்களில் இவ்வாறு மின்சாரத் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

மரங்கள் வீழ்வு, மண்மேடு சரிவு போன்ற காரணங்களால்  சில பாதைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, வீடுகளுக்கும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்குகடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கம்

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட,...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...